நடைபெற்ற இடம்
World Tamil Academy,
Sithurajapuram, Sivakasi.
நாள் மற்றும் நேரம்
2025-01-06
6.30 AM
பங்கு பெற்றவர்கள்
World Tamil Academy Teachers,
SFR College Teachers, Students,
& WTA Students and Their Friends

      உலகத்தமிழ்க் கல்விக்கழகமும், சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய உலகத்தமிழ்க் கல்விக்கழக மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள்


உலகத்தமிழ்க் கல்விக்கழக மாணவர்களுக்குச் சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தினர். திங்கள்கிழமை (06.01.2025) இந்திய நேரப்படி காலை 06.30 மணிக்கு "பனைமரம்" & "பூக்களின் ஏழு நிலைகள்" ஆகிய இரண்டு தலைப்புகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. பல மாணவர்கள் இந்தச் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், பல மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சிறப்பு வகுப்பிற்கான உரலியைப் பகிர்ந்து கொண்டு அவர்களையும் பயன்பெறச் செய்தனர். இந்தச் சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்குப் புதிய அறிவையும், அனுபவத்தையும் வழங்கியது. மேலும், தமிழ் இலக்கியத்தில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. இந்த நிகழ்வு சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரிக்கும் உலகத்தமிழ்க் கல்விக்கழகத்திற்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தியது. இத்தகைய சிறப்பு வகுப்புகளை எதிர்காலத்திலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

.