நடைபெற்ற இடம்
World Tamil Academy,
Sithurajapuram, Sivakasi.
நாள் மற்றும் நேரம்
2023-01-25
04.30 AM
பங்கு பெற்றவர்கள்
World Tamil Academy Students
&
World Tamil Academy Teachers

      உலகத்தமிழ்க் கல்விக்கழகம், மாணவர்களுக்காக இந்தியக் குடியரசு தினவிழாவைக் கொண்டாடும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தியது. அதில் பங்கேற்க உலகத்தமிழ்க் கல்விக்கழக மாணவர்களில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத்தலைவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் விதமாகவும், மாணவர்களுக்குக் கற்பிக்கும் வகையிலும் இந்தச் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அத்துடன் ஆசிரியர்கள் சக மாணவர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் குடியரசு தினவிழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் "வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!" என்றும் உரத்தக் குரலில் முழக்கமிட்டனர்.